Posts

Showing posts from August, 2023

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

Image
 யன்னல் எழுத்தாளர் சல்மாவின்  'இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலைக் குறித்து தேடிச்சோறு நிதம்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்றுப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்கூற்றுக் கிரை என பின் மாயும் பல வேடிக்கை மனிதர்களால் உருவாக்கப்பட்டது நாம் வாழும் இந்தச் சமூகம்.  இக்கட்டமைப்பிற்குள் இயந்திரகதியில் வாழ்ந்திறக்க நாம் பணிக்கப்பட்டிருக்கின்றோம். இதில் ஏதொரு குளறுபடியும் நேராமல் இருக்கப்பார்த்துக்கொள்ள அது அம்மனிதர்களையே நியமித்திருக்கின்றது. இந்த இயந்திரகதிக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள- மனிதர்களைப் பழக்கப்படுத்த வேண்டியதை சமூகம் தனது முழுமுதற் கடமையாக பாவிக்கின்றது. இதற்கு வகையாக, மனிதர்களை வகைப்பிரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அதற்கு அவசியமாகிறது.  இதன்படி நோக்குகையில் மனிதன் ஒரு உயிரினம் என்பதைத் தாண்டி ஏற்படுத்தப்பட்ட அனைத்துமே சமூகக் கட்டமைப்பின் கற்பிதங்களே ஆகும்.  சாதி-மதம்-நிறம்- மொழி-நாடு எனப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு - உண்டுறங்கி இடர் செய்து செத்திட...

சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் பிரக்ஞை

Image
கி. தினேஷ் கண்ணன் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் குறித்தான பார்வை   நிகழ்வுகள் அசைவு முள் உணர்த்தும் திசை நோக்கி வாழ்வு நகர்கிறது. புறவுலகைப் புலன்களினால் அகத்தீட்டலின் வகைவகையால் பருப்பொருளைைத் துய்த்துணரும்- வாழ்ந்திறக்கும் மனிதர்களின் அகக்கூறுகளில் கருக்கொள்ளும் வினையூக்கத்தால் வெளிப்படும் செயல்களின் பின்னலான நிகழ்வுகளின் உட்கிடையாக உள்ள புதிர்த்தன்மையை முன்முயற்சிகளின்றி சிரமக்கிரமங்களின்றி கருத்தமைதியோடு சொல்லி நிற்பவையே சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள்.  சமூகம் என்னும் வடிவ மயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் மனோவிகாரங்களை, செயலசைவுகளை சிலந்தி வலையின் பின்னல் வடிவம்போலக் கொண்டு உருவாகும் நிகழ்வுகள் வாழ்வை நிறைக்கின்றன.  அந்த நிகழ்வுகள் வாழ்வின் புதிர்ச்சிக்கலால் ஆனது. அதற்கான அர்த்தம் அப்பின்னல் வலையின் ஏதோவொரு இழையில் இருக்கலாம். அவ்விழையே அவ்வலையின் அர்த்தமாக இருப்பினும் அது முன்னிலையாகவன்றி அதன் பின்னோட்டமாகவே அம்மொத்த வலைக்குமான புதிர்த்தன்மையை உணர்த்தி நிற்கும்.  அத்தன்மைகளின் அருவமான இருப்பு, இக்கதைகளின் சாரங்களாகும். அந்த இ...