ப. சிங்காரம் - அர்த்தத்தைத் தேடும் தேடலின் அர்த்தம்
.jpeg)
கி. தினேஷ் கண்ணன் ப. சிங்காரத்தின் படைப்புகளை முன்வைத்து* "எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்" மதுரை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்த பா.சிங்காரம் தென்கிழக்காசிய நாடுகளில் போர்களுக்கிடையேயான தனது வாழ்வனுபவங்களை நாவல்களாக எழுதி இருக்கிறார் என்று கருதி வந்ததனாலேயே ஒரு மகத்தான படைப்பாளியின் புத்துயிர்ப்பூட்டும் உள்ளீடுகளை இலக்கியம் இழந்து நிற்கின்றது. பா.சிங்காரம் தன்னைக் கலனாகக் கொண்டு இலக்கியத்தைக் களமாகக் கொண்டு மொழியைக் கைகொண்டு படைத்தலித்திருக்கும் இந்நாவல்கள் படைப்பிலக்கியத்திற்கு செழுமை சேர்த்ததோடு...