Posts

Showing posts from July, 2023

ப. சிங்காரம் - அர்த்தத்தைத் தேடும் தேடலின் அர்த்தம்

Image
கி. தினேஷ் கண்ணன் ப. சிங்காரத்தின் படைப்புகளை முன்வைத்து*                                                                                                                                  "எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்"  மதுரை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்த பா.சிங்காரம் தென்கிழக்காசிய நாடுகளில் போர்களுக்கிடையேயான தனது வாழ்வனுபவங்களை நாவல்களாக எழுதி இருக்கிறார் என்று கருதி வந்ததனாலேயே ஒரு மகத்தான படைப்பாளியின் புத்துயிர்ப்பூட்டும் உள்ளீடுகளை இலக்கியம் இழந்து நிற்கின்றது. பா.சிங்காரம் தன்னைக் கலனாகக் கொண்டு இலக்கியத்தைக் களமாகக் கொண்டு மொழியைக் கைகொண்டு படைத்தலித்திருக்கும் இந்நாவல்கள் படைப்பிலக்கியத்திற்கு செழுமை சேர்த்ததோடு...

இருத்தலியமும் போர்ப் பைசாசமும்

Image
கி. தினேஷ் கண்ணன் எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல்களை முன்வைத்து * சிறுகதைகள்‌, நாவல்கள்‌, சினிமா என பரந்துபட்ட படைப்புத்‌ தளங்களில்‌ இயங்கி வரும்‌ எழுத்தாளர்‌ ஷோபாசக்தியினது படைப்புகளின்‌ மைய இழையாகவும்‌ பின்புலமாகவும்‌ புறச்‌ சூழலாகவும்‌ அகப்போராட்டங்களாகவும்‌ அமைந்திருப்பது போரும்‌ அதன்‌ தாக்கங்களும்‌ அகதி வாழ்வுமேயாகும்‌. போர்‌ என்பது எவ்வகையானும்‌ நிகழக்‌ கூடாத ஒன்று. ஆனால்‌ வரலாறு நெடுகிலும்‌ மேலதிகமாக அதுவே நிகழ்ந்து வந்துள்ளது. அனைத்து எல்லைக்‌ கோடுகளும்‌ ரத்தத்தினாலேயே போடப்பட்டவை. பேரினவாதம்‌ இருப்பதிலேயே கொடுங்கோன்மையான இரக்கமற்ற போர்களுக்கும்‌ அவலங்களுக்கும்‌ வழி செய்கின்ற ஒன்று. அதுவே இலங்கையை பிடித்த போர்‌ப் பைசாசம்‌. ஆங்கிலேயே காலனிய சுதந்திரத்திற்கு பின்‌ அமைந்த சிங்கள அரசால்‌ தமிழர்களின்‌ உரிமைகள்‌ வெகுவாக பறிக்கப்பட்டன. அதனை எதிர்த்து அகிம்சையை முன்னெடுத்த தந்‌தை செல்வா உள்ளிட்டோரின்‌ போராட்டங்கள்‌ அலட்சியம்‌ செய்யப்பட்டன. பின்னாட்களில்‌ கொதித்துப்போன இளைய தலைமுறையினர்‌ ,எதிரிகள்‌ தீர்மானித்த ஆயுதத்தை கையில்‌ எடுத்துப் போராடத்  தொடங்கினர்‌. அவ்வாறாக பல இயக்கங்கள்‌ த...